×

மணிமுக்தாற்றில் மணல் கடத்திய 8 பேர் கைது

விருத்தாசலம், ஜூன் 11: விருத்தாசலம் சப்-இன்ஸ்பெக்டர் புஷ்பராஜ் மற்றும் போலீசார் விருத்தாசலம் பகுதியில் நேற்று முன்தினம் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது நாச்சியார்பேட்டை மணிமுக்தாற்றில் இருந்து அனுமதியின்றி மணல் கடத்தி வந்த 4 மாட்டு வண்டிகளை பறிமுதல் செய்து காவல்நிலையம் கொண்டு சென்றனர். தொடர்ந்து மாட்டு வண்டிகளின் உரிமையாளர்களான கோபுராபுரத்தை சேர்ந்த சாரங்கபாணி மகன் பிரபு (31), நாராயணசாமி (64) கணபதி மகன் வேல்முருகன் (40) முஷ்ணத்தை சேர்ந்த பெருமாள் மகன் சுப்பிரமணியன் (50) ஆகிய 4 பேரையும் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். அதுபோல் சப்-இன்ஸ்பெக்டர் ஆதி தலைமையிலான போலீசார் கொளஞ்சியப்பர் கல்லூரியின் பின்புறம் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த போது, மணிமுக்தாற்றில் இருந்து அனுமதியின்றி மணல் கடத்தி வந்த 4 மாட்டு வண்டிகளை பறிமுதல் செய்தனர். தொடர்ந்து அந்த மாட்டு வண்டிகளின் உரிமையாளர்களான, கோபுராபுரத்தை சேர்ந்த பழமலை மகன் வல்லரசு (35), ரங்கநாதன் மகன் அருள் (44) ராஜாங்கம் மகன் ராஜசேகரன் (30), ராஜாக்கண்ணு மகன் சகாதேவன் (44) ஆகிய 4 பேரையும் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். தொடர்ந்து 8 பேருக்கும் அபராத தொகை விதிக்க விருத்தாசலம் சார் ஆட்சியர் பிரசாந்த்துக்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.

Tags :
× RELATED சிறுமி மாயம் போலீசில் புகார்