காரிமங்கலம், ஜூன் 11: காரிமங்கலம் அருகே, திண்டல் தொடக்க ேவளாண்மை கூட்டுறவு வங்கியில், ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உறுப்பினர்களாக உள்ளனர். இந்நிலையில், வங்கிக்கான இயக்குனர்களை தேர்ந்தெடுக்க, கடந்த ஆண்டு தேர்தல் அறிவிக்கப்பட்டது. இதில், 5 பேர் போட்டியின்றி தேர்தெடுக்கப்பட்ட நிலையில், மீதமுள்ள இயக்குனர்களுக்கு முறையான தேர்தல் நடத்தக்கோரி, வக்கீல் மாதேஷ் என்பவர், சென்னை உயர் நீதிமன்றத்தில் கடந்த ஆண்டு வழக்கு தொடர்ந்தார். இது தொடர்பான வழக்கில், முறையான தேர்தல் நடத்த கூட்டுறவுதுறை அதிகாரிகளுக்கு, உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. இதையடுத்து, நேற்று காலை 7மணி முதல் மாலை 5மணி வரை, போலீஸ் பாதுகாப்புடன் தேர்தல் நடந்தது. இதில் 775 பேர் வாக்களித்தனர். இதற்கான ஓட்டு எண்ணிக்கை இன்று(11ம் தேதி) காலை வங்கி கட்டிடத்தில் நடைபெற உள்ளது.