×

ஒகேனக்கல் பகுதியில் நாட்டு துப்பாக்கிகளை ஒப்படைக்க தண்டோரா போட்டு விழிப்புணர்வு

பென்னாகரம், ஜூன் 11: ஒகேனக்கல் பகுதியில் நாட்டு துப்பாக்கிகளை பறிமுதல் செய்யக்கோரி, காவல்துறை சார்பில் தண்டோரா போட்டு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. தர்மபுரி மாவட்டம் ஒகேனக்கல் காவல் நிலைய எல்லைக்குட்ட பகுதிகளில், கள்ளத்தனமாக நாட்டு துப்பாக்கி வைத்திருப்பதை தடுக்க, தர்மபுரி மாவட்ட எஸ்பி ராஜன் உத்தரவிட்டார். அதன் பேரில், ஒகேனக்கல் போலீசார் சார்பில், தண்டோரா மூலம் போட்டு விழிப்புணர்வு ஏற்படுத்தினர். அப்போது அனுமதியின்றி வைத்திருக்கும் நாட்டு துப்பாக்கிகளை, கிராம நிர்வாக அலுவலகம் அல்லது ஒகேனக்கல் போலீஸ் ஸ்டேஷனில் தாங்களாகவே முன்வந்து ஒப்படைக்க ேவண்டும். அவ்வாறு துப்பாக்கிகளை ஒப்படைக்கும் நபர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படாது. தடையை மீறி பயன்படுத்தி வரும் நபர்கள் மீது, நடவடிக்கை எடுக்கப்படும் என தண்டோரா மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.

Tags : Dandora ,area ,Hogenakkal ,
× RELATED அருமனை அருகே மின்கசிவு ஏற்பட்டு வீடு தீப்பிடித்து எரிந்தது