×

வாக்கூர் தீப்பாய்ந்த அம்மன் கோயில் கும்பாபிஷேகம்

சேத்தியாத்தோப்பு, ஜூன் 7: சேத்தியாத்தோப்பு அருகே வாக்கூர் கிராம வாய்க்கால் கரையில் உள்ள தீப்பாய்ந்த அம்மன் கோயில் மகாகும்பாபிஷேக விழாவை முன்னிட்டு யாகசாலையில் வைக்கப்பட்ட புனிதநீர் கலசங்களுக்கு அனுக்ஞை, விக்னேஸ்வர பூஜை, கணபதி ஹோமம், நவக்கிரக ஹோமம், வாஸ்து சாந்தி, யாகசாலை பூஜைகள் நடந்தது. தொடர்ந்து கடம் புறப்பாடு நடந்தது.பின்னர் கோயில் கோபுரத்தின்மேல் உள்ள கலசத்துக்கு புனிதநீர் ஊற்றப்பட்டு மகா கும்பாபிஷேகம் நடந்தது. இதனையடுத்து பரிவார தெய்வங்களுக்கும் புனித நீர் ஊற்றப்பட்டு கும்பாபிஷேகம் நடைபெற்றது. பின் மகாதீபாராதனை காட்டப்பட்டு, பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

Tags : Kumbabhishekam Ammu Temple ,
× RELATED சிறுமி மாயம் போலீசில் புகார்