×

திருநள்ளாறில் நால்வர் வீதியுலா

காரைக்கால், ஜூன் 7: காரைக்கால் திருநள்ளாறு தர்பாரண்யேஸ்வரர் கோயிலில் சனி பகவான் தனி சன்னதி கொண்டு அருள்பாலித்து வருகிறார். இக்கோயிலில் பிரம்மோற்சவ விழா ஆண்டுதோறும் சிறப்பாக நடைபெறுவது வழக்கம். நடப்பாண்டு பிரம்மோற்சவ விழா கடந்த மே 29 ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.தொடர்ந்து விநாயகர் உற்சவம், சுப்பிரமணியர் உற்சவம் நடைபெற்றுவந்தது. விழாவின் முக்கிய நிகழ்வுகளில் ஒன்றான அடியார்கள் நால்வர் (சுந்தரர், திருஞானசம்பந்தர், மாணிக்க வாசர், திருநாவுக்கரசர்) புஷ்ப பல்லக்கு வீதியுலா நேற்று முன்திAனம் இரவு நடைபெற்றது. இதனையொட்டி சுவாமிகளுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை நடந்தது. தொடர்ந்து அடியார் நால்வர் சிறப்பு அலங்காரத்தில் புஷ்ப பல்லக்கில் எழுந்தருளியதும் மகா தீபாராதனை காட்டப்பட்டு வீதியுலா நடைபெற்றது.
 நிகழ்ச்சியில் கோயில் கட்டளை விசாரணை கந்தசாமி தம்பிரான் சுவாமிகள், நிர்வாக அதிகாரி சுந்தர் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக வரும் 12ம் தேதி தேரோட்டம், 13ம் தேதி சனீஸ்வர பகவான் தங்க காக வாகனத்தில் எழுந்தருளி வீதியுலா நடைபெறவுள்ளது.

Tags : streets ,Thirunallar ,
× RELATED சென்னையில் நாளை திறந்த வெளி வேனில்...