×

பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்துகொள்ள சேலம் வந்த முதல்வருக்கு கட்சியினர் உற்சாக வரவேற்பு

சேலம், ஜூன் 7:பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக, நேற்றிரவு சேலம் வந்த முதல்வருக்கு, கட்சியினர்  உற்சாக வரவேற்பு அளித்தனர். சேலம் 5 ரோட்டை மையமாக கொண்டு, ஏவிஆர் ரவுண்டானா, 4 ரோடு, சாரதா கல்லூரி, குரங்குச்சாவடி வரை ஈரடுக்கு மேம்பாலம் கட்டப்பட்டு வருகிறது. இதில் பணிகள் நிறைவடைந்த சாரதா கல்லூரி முதல் ஏவிஆர் ரவுண்டானா வரையிலான ஒரு பகுதியின்  திறப்பு விழா இன்று நடக்கிறது. இவ்விழாவில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி கலந்து கொண்டு, மேம்பாலத்தினை திறந்து வைக்கிறார்.

இதற்காக நேற்று மாலை விமானம் மூலம் கோவை வந்த முதல்வர், பின்னர் அங்கிருந்து காரில் சேலம் வந்தார். நெடுஞ்சாலை நகரில் உள்ள அவரது வீட்டில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. மாநகர் மாவட்ட செயலாளர் வெங்கடாசலம் எம்எல்ஏ, எம்எல்ஏக்கள் செம்மலை, சக்திவேல், வெற்றிவேல், முன்னாள் எம்பி பன்னீர்செல்வம் ஆகியோர் முதல்வருக்கு பூங்கொத்து கொடுத்து வரவேற்றனர். அப்போது, மாவட்ட கலெக்டர் ரோகிணி, மாநகராட்சி கமிஷனர் சதீஸ், போலீஸ் கமிஷனர் சங்கர், மேற்கு மண்டல ஐஜி பெரியய்யா, டிஐஜி செந்தில்குமார், எஸ்பி தீபா கனிக்கர் ஆகியோர் உடனிருந்தனர்.

Tags : party ,events ,Salim ,
× RELATED தொழிலாளர்களுக்கு ஆதரவான சட்டங்களை...