×

சூறைக்காற்றுக்கு மின்வயர் அறுந்து விழுந்து பெண் பலி

கிருஷ்ணகிரி, ஜூன் 7:பேரிகை அருகேயுள்ள அமுதகொண்டப்பள்ளி பகுதியை சேர்ந்தவர் நடுப்பண்ணா(65). இவரது மனைவி லட்சுமியம்மாள்(53). நேற்று மாலை அண்ணா நகரில் உள்ள பெட்டிக்கடை அருகே நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது திடீரென பலத்த சூறைக்காற்றுடன் மழை பெய்ததில், காற்றில் அங்கிருந்த மின்கம்பத்தில் மின்வயர் அறுந்து லட்சுமியம்மாள் மீது விழுந்தது. இதில் மின்சாரம் பாய்ந்து அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து தகவலறிந்த பேரிகை போலீசார், அவரது உடலை பிரேத பரிசோதனைக்காக ஓசூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இதுகுறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags :
× RELATED மறியலில் ஈடுபட்ட 35 பேர் மீது வழக்கு