×

கரூர் ராயனூர் நடுநிலை பள்ளி கூடுதல் கட்டிடத்திற்கு சுற்றுச்சுவர்இல்லாததால் பாதுகாப்பற்ற நிலை

கரூர், ஜூன் 7: கரூர் நகராட்சிக்குட்பட்ட ராயனூரில் உள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலை பள்ளியில் கூடுதல் வகுப்பறை கட்டிடத்தை சுற்றிலும் சுற்றுச்சுவர் அமைக்க வேண்டும் என எதிர்பார்க்கப்படுகிறது.
கரூர் நகராட்சிக்குட்பட்ட ராயனூரில் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது. அதிகளவு மாணவர்கள் சேர்க்கை காரணமாக பள்ளி வளாகத்தின் அருகிலேயே கூடுதல் கட்டிடங்கள் கட்டப்பட்டு இந்த வளாகத்திலும் ஏராளமான மாணவ, மாணவிகள் பயின்று வருகின்றனர்.ஆனால் கூடுதல் வகுப்பறை வளாகத்தை சுற்றிலும் சுற்றுச்சுவர் அமைக்கப்படாத காரணத்தினால் விடுமுறை நாட்களில் பள்ளி வளாக வகுப்பறைக்குள் பலரும் வந்து செல்வதாக கூறப்படுகிறது.
எனவே பாதுகாப்பற்ற நிலையில் உள்ள இந்த வகுப்பறை கட்டிடத்தை சுற்றிலும் சுற்றுச்சுவர் அமைத்து தர வேண்டும் என பள்ளி மாணவ, மாணவிகளும் பெற்றோர்களும், ஆசிரியர்களும் கோரிக்கை வைத்துள்ளனர்.
எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் பார்வையிட்டு கூடுதல் வகுப்பறை வளாகத்தை சுற்றிலும் மாணவ, மாணவிகளின் நலன் கருதி, சுற்றுச்சுவர் அமைத்து தர தேவையான ஏற்பாடுகளை மேற்கொள்ள வேண்டும் என அனைவராலும் எதிர்பார்க்கப்படுகிறது.

Tags : Karur Rayanur ,school ,building ,
× RELATED தீயணைப்பு துறையினர் அணைத்தனர்...