×

ஆசனூர் அருகே டிராக்டர் கவிழ்ந்து தொழிலாளி பலி

சத்தியமங்கலம், ஜூன் 5: ஆசனூர் அருகே டிராக்டர் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் தொழிலாளி பலியானார். சத்தியமங்கலம் அடுத்துள்ள ஆசனூர் மலைப்பகுதியில் உள்ள கெத்தேசால் மலைகிராமத்தை சேர்ந்தவர் மாதேவன் (30). தொழிலாளி. இவரை மாவள்ளம் கிராமத்தை சேர்ந்த கோயில் பூசாரி மகாதேவன் என்பவர் நேற்று காலை தனது தோட்ட வேலைக்காக டிராக்டரில் அழைத்துச் சென்றார். டிராக்டரை மகாதேவன் ஓட்டினார். கெத்தேசாலில் இருந்து மாவள்ளம் செல்லும் சாலையில் டிராக்டர் சென்றபோது பின்னால் வந்த வாகனத்திற்கு வழிவிட ஒதுங்கியபோது எதிர்பாராதவிதமாக சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்தது. இதில், மாதேவன் சம்பவ இடத்திலேயே இறந்தார். இதுகுறித்து ஆசனூர் போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.

Tags : employer ,Asanur ,
× RELATED உளுந்தூர்பேட்டை அருகே பேருந்து தலைகீழாக கவிழ்ந்ததில் 15 பேர் படுகாயம்