×

அமாவாசையை முன்னிட்டு சாமுண்டீஸ்வரி கோயிலில் மிளகாய் சண்டி யாகம்

அரியலூர், ஜூன் 4: அரியலூர் மாவட்டம் செந்துறை அடுத்த பொய்யாதநல்லூரில் சாமுண்டீஸ்வரி கோயில் உள்ளது. இந்த கோயிலில் உள்ள மகா பிரத்தியங்கிராதேவிக்கு மாதம்தோறும் அமாவாசை தினத்தன்று மிளகாய் சண்டியாகம் பூஜை நடைபெறுவது வழக்கம். அதன்படி நேற்று மிளகாய் சண்டி யாகம் நடந்தது. இதில் திரளான பக்தர்கள் பங்கேற்று நேர்த்திக்கடனை செலுத்தி சாமி தரிசனம் செய்தனர். அப்போது பக்தர்கள் கொண்டு வந்த மிளகாய் அனைத்தும் எரியும் நெரிப்பில் கொட்டினர். சிறப்பு வழிபாட்டில் சுற்றுவட்டார பகுதியை சேர்ந்த திரளான பக்தர்கள் பங்கேற்றனர்.

Tags : Chilli Chandi Yagam ,Chamundeswari Temple ,
× RELATED பொய்யாதநல்லூர் சாமுண்டீஸ்வரி கோயிலில் மிளகாய் சண்டி யாகம்