×

பெரம்பலூரில் மழை வேண்டி இஸ்லாமியர்கள் சிறப்பு கூட்டு தொழுகை

பெரம்பலூர்,ஏப்.28: பெரம் பலூரில் மழை வேண்டி இஸ்லாமியர்கள் சிறப்பு கூட்டுத்தொழுகை நடத்தி பிரார்த்தனை செய்தனர். இதில் 5 பள்ளிவாசல்களைச் சேர்ந்த 500க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர். பெரம்பலூர் நகரில் உள்ள மதரஸா பள்ளிவாசல், டவுன் பள்ளிவாசல், நூர் பள்ளிவாசல், மக்கா பள்ளி வாசல், அபு ஹனிபா பள்ளி வாசல் ஆகிய 5-பள்ளி வாசல்களைச் சேர்ந்த இஸ்லாமியர்கள் நேற்று (27ம்தேதி) பெரம்பலூர் வருவாய் கோட்டாட்சியர் அலுவலகம் எதிரே உள்ள மவுலானா மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் ஒன்று கூடினர். அங்கு தமிழகத் தில் வரலாறு காணாதபடி நிலவிவரும் கடும் வெப்பம் குறைய வேண்டும், பொது மக்களுக்கு தேவையான குடிநீர்ஆதாரத்திற்கும், விவ சாயத்திற்குத் தேவையான நீர் ஆதாரத்திற்கும், கடும் வெப்பத்தின் தாக்கம் குறைந்து பூமி குளிரவேண்டும் என்பன உள்ளிட்டக் காரணங்களுக்காக நல்ல மழை வேண்டி சிறப்பு கூட்டுத் தொழுகை நடத்தினர்.

பெரம்பலூர்,அரியலூர் மாவட்டங்களுக்கான ஜமா அத்துல் உலமா சபை தலைவர் முகமது முனீர் தொழுகைக்கு தலைமை வகித்தார்.டவுன் பள்ளிவாசல் பேஷ் இமாம் முகமது சல்மான் கலந்து கொண்டு துவா ஓதி மழைக்காக பிரார்த் தனை செய்தார். இந்த சிறப்பு கூட்டுத் தொழுகைக்கான ஏற்பாடுகளை ஆலம்பாடி மதரஸா பள்ளிவாசல் ஹஜ்ரத் இக்க்ஷானுல்லா செய்திருந்தார். இந்த சிறப்பு கூட்டுத் தொழுகையில் பெரம்பலூர் நகரில் உள்ள அனைத்து பள்ளிவாசல்களை சேர்ந்த 500க்கும் மேற்பட்ட இஸ்லாமியர்கள் கலந்து கொண்டனர்.

The post பெரம்பலூரில் மழை வேண்டி இஸ்லாமியர்கள் சிறப்பு கூட்டு தொழுகை appeared first on Dinakaran.

Tags : Muslims ,Perambalur ,Madrasa ,Noor ,Makkah ,
× RELATED தீயணைப்பு துறையினர் அணைத்தனர்...