×

சுகாதார பணியாளர்கள் 20 பேரின் தரம் உயர்வு

மதுரை, ஜூன் 4: மதுரை அரசு மருத்துவமனையில் சுகாதார பணியாளர்களாக பணிபுரிந்து வந்த 20 பேர் மருத்துவமனை பணியாளர்களாக பணி மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.  மதுரை அரசு மருத்துவமனையில் கூட்டுதல், கழுவுதல் உள்ளிட்ட சுத்தம் செய்தல் உள்ளிட்ட பணிகளை செய்துவரும் சுகாதாரப் பணியாளர்கள், 10 ஆண்டுகள் பணிபுரிந்து விட்டால், பணிமூப்பு அடிப்படையில், அவர்கள் மருத்துவமனை பணியாளர்களாக பணி மாற்றம் செய்யப்படுவர்.

இதன்படி, மதுரை அரசு மருத்துவமனையில் சுகாதாரப்பணியாளர்களாக பணிபுரிந்து வரும் 19 பேரும், ஆஸ்ட்டின்பட்டியில் ஒரு சுகாதாரப் பணியாளர் என மொத்தம் 20 பேர், 10 ஆண்டுகளுக்கு மேலாக சுகாதாரப்பணியாளர்களாக பணியாற்றி உள்ளனர். இவர்கள், பணி மூப்பு அடிப்படையில்  மருத்துவமனை பணியாளர்களாக பணி மாற்றம் செய்யப்பட்டு, மருத்துவக்கல்வி இயக்குனர் அலுவலகத்திலிருந்து உத்தரவு வந்துள்ளது. இதன்பேரில் இவர்களையும் சேர்த்து 14 பெண் சுகாதாரப் பணியாளர்கள், 6 ஆண் சுகாதார பணியாளர்கள் மருத்துவமனை பணியாளர்களாக தங்கள் பணியை துவக்கியுள்ளனர்.

Tags : healthcare staff ,
× RELATED மதுரையில் தொடர் சோதனை ஸ்மோக் பிஸ்கெட்...