×

பென்னாகரம் முள்ளுவாடி ஏரியில் கழிவுநீர் தேங்குவதால் நிலத்தடி நீர் பாதிப்பு

பென்னாகரம், மே 30: பென்னாகரம் அருகே முள்ளுவாடி ஏரியில் கழிவுநீர் தேங்குவதால், நிலத்தடி நீர் மாசடைந்துள்ளது.பென்னாகரம் பொதுப்பணித்துறைக்கு சொந்தமான முள்ளுவாடி ஏரி,  10 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ளது. பென்னாகரம் பேரூராட்சியில் சேகரமாகும் கழிவுநீர் அனைத்தும், இந்த ஏரியில் விடப்படுகிறது. இதனால் கடும் துர்நாற்றம் வீசுவதோடு, தொற்று ேநாய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. ஏரியில் தேங்கிய கழிவுநீர், எட்டியாம்பட்டி, கோடியூர் ஏரிகளிலும் கலப்பதால் அந்த ஏரிகளிலும் துர்நாற்றம் வீசி வருகிறது. இதனால் அப்பகுதியில்  நிலத்தடி நீர் பாதிக்கப்பட்டு, பச்ைச நிறமாக மாறியுள்ளது. இது குறித்து அப்பகுதி மக்கள் கூறுகையில், ‘முள்ளுவாடி ஏரியில் தேங்கியுள்ள கழிவுநீரால், சுற்றுவட்டார கிராமங்களில் நிலத்தடி நீர் பாதிக்கப்பட்டுள்ளது. அந்த தண்ணீரை பயன்படுத்தினால், உடல் அரிப்பு உள்ளிட்ட பிரச்னைகள் ஏற்படுகிறது. எனவே, ஏரியை தூர்வார ேபரூராட்சி அதிகாரிகள் நடவடிக்ைக எடுக்க ேவண்டும்,’ என்றனர்.


Tags : lake ,Mulluvadi ,
× RELATED பூண்டி ஏரியில் இருந்து புழல் ஏரிக்கு திறக்கப்பட்ட தண்ணீர் நிறுத்தம்..!!