தர்மபுரி, மே 30: தர்மபுரி மாவட்ட ஓய்வு ெபற்ற வருவாய் அலுவலர்கள் சங்கத்தின் 8ம் ஆண்டு விழா தர்மபுரியில் நடந்தது. விழாவிற்கு தலைவர் தங்கராஜ் தலைமை வகித்தார். துணை தலைவர் வேணு வரவேற்றார். கூட்டத்தில் 70 வயதை கடந்தவர்களுக்கு பொன்னாடை போர்த்தி கவுரவிக்கப்பட்டது. செயலாளர் ஆறுமுகம் அறிக்கை வாசித்தார். பொருளாளர் திருவேங்கடம் நிதிநிலை அறிக்கை வாசித்தார். தொழிலதிபர் கந்தசாமி, குமாரசாமி, பிரேமா சந்திரசேகரன், ராமானுஜம், கிருஷ்ணமூர்த்தி, வேதநாயகி, ஆகியோர் வாழ்த்தி பேசினர். ராதா உள்பட சங்கத்தினர் பலர் கலந்து கொண்டனர்.