×

காரிமங்கலம் அருகே 15 வயது சிறுமியை கடத்திய வாலிபர்

தர்மபுரி, மே 30: காரிமங்கலம் அருகே சிறுமியை கடத்திய வாலிபரை போக்சோ சட்டத்தில் ேபாலீசார் கைது செய்தனர்.தர்மபுரி மாவட்டம் காரிமங்கலம் சுண்ணாம்புபட்டி பகுதியை சேர்ந்த 15வயது மாணவி அப்பகுதியில் உள்ள அரசு பள்ளியில் 9ம் வகுப்பு படித்து வந்தார். இந்நிலையில், மேத்தனாம்பட்டி பகுதியை சேர்ந்த காளியப்பன் மகன் அருண்குமார் (27) என்பவர் சிறுமியின் உறவினர் வீட்டில், கார் டிரைவராக பணியாற்றி வருகிறார். அப்போது சிறுமிக்கும், அருண்குமாருக்கும் பழக்கம் ஏற்பட்டு, இருவரும் அடிக்கடி பேசி வந்தனர். இதனை அறிந்த சிறுமியின் பெற்றோர் இருவரையும் கண்டித்துள்ளனர். இந்நிலையில் கடந்த 14ம் தேதி வீட்டில் இருந்த சிறுமி மாயமானார். இதுகுறித்து பெற்றோர் தர்மபுரி அனைத்து மகளிர் காவல்நிலையத்தில் புகார் அளித்தனர். வழக்குப்பதிவு செய்த போலீசார், தீவிர விசாரணை நடத்தி வந்தனர். விசாரணையில் சிறுமியை அருண்குமார் கடத்தி சென்றது தெரியவந்தது.இதனையடுத்து, போலீசார் அருண்குமாரை போக்சோ சட்டத்தில் நேற்று கைது செய்து, சிறுமியை மீட்டு பெற்றோரிடம் ஒப்படைத்தனர்.


Tags : Calimangalam ,
× RELATED காரிமங்கலம் அரசு மருத்துவமனையில்...