ஈரோடு, மே 30: ஊராட்சிக்கோட்டை துணை மின்நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடப்பதால் ஜூன் 1ம் தேதி காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை கீழ்க்கண்ட பகுதிகளில் மின்விநியோகம் இருக்காது என மின்வாரியம் அறிவித்துள்ளது.பவானிநகர், மூன்ரோடு, ஊராட்சிக்கோட்டை, ஜீவாநகர், செங்காடு, குருப்பநாயக்கன்பாளையம், நடராஜபுரம், ராணாநகர், ஆண்டிக்குளம், என்ஜிஜிஓ காலனி, மேட்டுப்பாளையம், சன்னியாசிப்பட்டி, வரதநல்லூர், சங்கரகவுண்டன்பாளையம், மொண்டடிபாளையம், கன்னடிபாளையம், மைலம்பாடி, ஆண்டிபாளையம், சக்திநகர், கொட்டக்காட்டுப்புதூர், மோளகவுண்டன்புதூர், செலம்பகவுண்டன்பாளையம், வாய்க்கால்பாளையம், கேசரிமங்கலம் பிரிவு, கல்பாவி.