தாராபுரம், மே 29: கடந்த மூன்று மாதத்திற்கும் மேலாக குடிநீர்விநியோகம்செய்யப்படவில்லை. ஒரு குடம் தண்ணீர் ஏழு ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. இதனால்,முறையாக குடிநீர் விநியோகம் செய்ய கோரி கிராம மக்கள் சப்-கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்டு நேற்று மனு அளித்தனர். தாராபுரம் அருகே உள்ளது தொப்பம்பட்டி ஊராட்சி. இங்குள்ள வெங்கிட்டிபாளையம், மடத்துப்பாளையம், சின்னியம்பாளையம், வேளாங்காட்டுப்புதூர் உள்ளிட்ட 10க்கு மேற்பட்ட கிராமங்களில் 500க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசிக்கின்றனர். இப்பகுதி மக்களின் குடிநீர் தேவையை பூத்தி செய்யும் வகையில் அமராவதி ஆற்றில் இருந்து தண்ணீர் விநியோகிக்கப்பட்டது. இதற்கிடையே கோடை காலம் துவங்கியதால் இப்பகுதி மக்களுக்கு போதுமான குடிநீர் விநியோகம் செய்யப்படவில்லை. இதனால், அப்பகுதி மக்கள் சுமார் 10க்கும் மேற்பட்டோர், தாராபுரம் சப்-கலெக்டர் அலுவலகத்தை நேற்று முற்றுகையிட்டு சப்-கலெக்டர் பவன்குமாரிடம் மனு அளித்தனர்.
அந்த மனுவில் கூறியுள்ளதாவது, ‘தொப்பம்பட்டி பஞ்சாயத்திற்கு உட்பட்ட 10க்கும் அதிகமான கிராமங்களுக்கு சுண்ணாம்புகாடு கூட்டு குடிநீர்திட்டம்மூலமாக அமராவதி ஆற்று குடிநீர் விநியோகிக்கப்பட்டு வந்தது. தற்போது கடந்த மூன்று மாததத்திற்கும் மேலாக இப்பகுதியில் குடிநீர்விநியோகம்செய்யப்படவில்லை. குடிநீர் தேவையை போக்கிட அமராவதி ஆற்றில்புதிதாக தரைமட்ட நீர்தேக்க தொட்டி அமைத்து தண்ணீர்விநியோகம் செய்ய கோரி ஊர்பொது மக்கள்சார்பாக கடந்த ஏப்ரல் 1ம்தேதி அனைத்து வீடுகளிலும்கருப்பு கொடி கட்டி போராட்டம் நடத்தப்பட்டது. இதை தொடர்ந்து, உடனடியாக மாவட்ட ஆட்சியர்அவர்களின்நிதியிலிருந்து அமராவதி ஆற்றில் தரைமட்ட நீர்தேக்க தொட்டி மற்றும்ஆழ்துளை கிணறு அமைத்து இரண்டு மாத காலத்திற்குள்பணிகள்முடிக்கப்பட்டு முறையாக குடிநீர்வழங்கப்படும்என அதிகாரிகள் உறுதி அளித்தனர்.‘இதன் பேரில் கருப்புகொடி போராட்டம் கைவிடப்பட்டது. ஆனால், இதுவரை பொதுமக்களுக்கு தண்ணீர் விநியோகிக்க முறையாக எவ்வித பணியும்நடக்கவில்லை. மேலும் கடும் குடிநீர் தட்டுப்பாடு காரணமாக ஒரு குடம் தண்ணீர் ரூ.7 கொடுத்து வாங்கும் நிலை ஏற்பட்டுள்ளது. எனவே அரசு நிர்வாகம் கிராம மக்களின் நலனை கருத்தில் கொண்டு உடனடியாக குடிநீர்தேவையை பூர்த்தி செய்ய வேண்டும். தவறினால் சாலையில் இறங்கி போராட்டம் நடத்துவோம். இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.