×

வாழப்பாடி பகுதியில் மின்சாரம் துண்டிப்பால் மக்கள் கடும் அவதி

வாழப்பாடி, மே 29: வாழப்பாடி பேரூராட்சி பகுதியில் நேற்று மின்சார வாரியத்தின் சார்பில் பராமரிப்பு பணிகள் நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டிருந்தது. இதற்காக 9 மணி முதல் மாலை 4 மணி வரையிலும் மின்சாரம் துண்டிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டிருந்தது. ஆனால், மாலை 6.30 மணி வரையிலும் மின்சப்ளை செய்யப்படாததால் மக்கள் அவதிக்குள்ளாகினர். அடிக்கடி மின்சாரம் துண்டிக்கப்படுவதால் வயதானவர்கள் மற்றும் குழந்தைகள் தவிப்பிற்குள்ளாகி வரும் நிலையில், மின் தடைக்கான நேரத்தை அறிவித்து விட்டு குறிப்பிட்ட நேரத்திற்கும் அதிகமாக மின்சாரம் துண்டிக்கப்பட்டதால் மக்கள் அதிருப்திக்குள்ளாகினர்.

Tags : depletion ,
× RELATED அரியலூர் மாவட்டத்தில் 14.8 டன் விதை நெல் கையிருப்பு