×

வைகையில் குப்பைகள் அகற்றம் மாநகராட்சி நடவடிக்கை

மதுரை, மே 29: வைகை ஆற்றில் கொட்டிக்கிடந்த குப்பைகளை மாநகராட்சி அகற்றியது. மதுரை மாநகராட்சி பகுதியில் குறுக்கிடும் வைகை ஆற்றில் குப்பைகள் கொட்டுவது தொடர்ந்து நடந்து வருகிறது. இதனை தடுக்க பல்வேறு நடவடிக்கைகள் எடுத்தும் முடியவில்லை. வைகையின் இரு கரையோரங்களில் கான்க்ரீட் சுற்றுச்சுவர் எழுப்பும் பணி நடந்து வருகிறது. இந்நிலையில் தீவிர துப்புரவுப் பணியை மாநகராட்சி கமிஷனர் விசாகன் தலைமையிலான மாநகராட்சி குழுவினர் மேற்கொண்டனர். வைகை ஆற்றில் இறங்கி அங்கு சிதறிக்கிடந்த குப்பைகளை துப்புரவு தொழிலாளர்கள், மாணவர்கள் அகற்றினர். முன்னதாக வைகை கரையோர மக்களுக்கு குப்பைகளை தரம்பிரிக்கு பச்சை மற்றும் நீலநிற கூடைகளை வழங்கினார். இந்த நிகழ்ச்சியில் துணை ஆணையர் குமரேஸ்வரன், மக்கள் தொடர்பு அலுவலர் சித்திரைவேல் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags :
× RELATED மதுரையில் தொடர் சோதனை ஸ்மோக் பிஸ்கெட்...