×

ரிஷிவந்தியம் பகுதியில் வெயிலால் மக்கள் அவதி

ரிஷிவந்தியம், மே 29: ரிஷிவந்தியம் ஒன்றிய பகுதிகளான அத்தியூர், அரியலூர், ஓடியந்தல், கடம்பூர் உள்ளிட்ட பகுதிகளில் வெயிலின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டு இருப்பதால் பொதுமக்கள் கடும் அவதியடைந்து வருகின்றனர். கோடைக்காலத்தில் கத்திரி வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்தது. வெயிலின் தாக்கம் குறையாமல் உள்ளதால் விவசாயிகள் தங்கள் பணிகளை செய்ய முடியாமல் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் மதியம் நேரங்களில் மரத்தின் அடியில் ஓய்வு எடுக்கின்றனர். மேலும் கரும்பு, நெல், வெண்டை மற்றும் கத்திரி ஆகிய பயிர்கள் வெயிலுக்கு தாக்கு பிடிக்க முடியாமல் கருகிவிட்டதாக விவசாயிகள் கவலை தெரிவித்துள்ளனர்.





Tags : area ,Rishivandiya ,
× RELATED ராட்சத அலையில் சிக்கியவர் பலி