×

ஆசனூர் அருகே 2 எருமைகளை அடித்துக்கொன்ற சிறுத்தை

சத்தியமங்கலம், மே 28: ஆசனூர் மலைப்பகுதி கிராமத்தில் மேய்ச்சலில் இருந்த 2 எருமைகளை சிறுத்ைத அடித்துக்கொன்ற சம்பவம் அப்பகுதி மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. சத்தியமங்கலம் அடுத்துள்ள ஆசனூர் மலைப்பகுதி மாவள்ளம் கிராமத்தை சேர்ந்தவர் அர்ஜூனன்(60). விவசாயியான இவர் 20க்கும் மேற்பட்ட எருமைகள் வளர்த்து வருகிறார். நேற்று காலை வழக்கம்போல் அர்ஜூனன் எருமைகளை மேய்ச்சலுக்கு ஓட்டிச்சென்றுள்ளார். எருமைகள் வனப்பகுதியோரம் உள்ள பட்டாநிலத்தில் மேய்ந்துகொண்டிருந்தபோது வனத்திலிருந்து வெளியேறிய சிறுத்தை மேய்ச்சலில் ஈடுபட்டிருந்த எருமைகளை துரத்தியது.

சிறுத்தை துரத்துவதைக்கண்ட எருமைகள் நாலாபுறமும் சிதறி ஓடின. இதைக்கண்ட அவர் அதிர்ச்சியடைந்தார். இந்நிலையில் 2 எருமைகள் வழிதவறி வனப்பகுதிக்குள் ஓடின. இதைக்கண்ட சிறுத்தை வனப்பகுதிக்குள் ஓடிய 2 எருமைகளை துரத்திப்பிடித்து அடித்துக்கொன்றது. இதுகுறித்து அர்ஜூனன் ஆசனூர் வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்தார். சம்பவ இடத்திற்கு சென்ற வனத்துறையினர் சிறுத்தை நடமாட்டம் உள்ள பகுதிகளில் கால்நடைகளை மேய்க்கவேண்டாம் என மலைகிராம மக்களிடம் அறிவுறுத்தினர். மேலும் வனப்பகுதிக்குள் சிறுத்தை கால்நடைகளை அடித்துக்கொன்றதால் இழப்பீடு வழங்க இயலாது என வனத்துறையினர் தெரிவித்தனர். பட்டப்பகலில் சிறுத்தை  எருமைகளை அடித்துக்கொன்ற சம்பவம் அப்பகுதி மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

Tags : anchor ,Ananur ,
× RELATED திமுக ஆட்சியில் கொண்டு வரப்பட்ட...