×

கடத்தூரில் ஸ்கூல் பேக் விற்பனை ஜோர்

கடத்தூர், மே 28: ஜூன் மாதம் பள்ளிகள் திறக்கப்பட உள்ளதால், கடத்தூரில் மாணவர்களுக்கு தேவையான ஸ்கூல் பேக் விற்பனை கன ஜோராக நடந்து வருகிறது. பள்ளிகளுக்கான கோடை விடுமுறை முடிய இன்னும் 6 நாட்களே உள்ள நிலையில், பாப்பிரெட்டிப்பட்டி தாலுகா கடத்தூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் ஸ்கூல் பேக் விற்பனை களை கட்டி உள்ளது. சாலையோரங்களில் ஏராளமான பேக்குகள் விற்பனைக்கு குவித்து வைக்கப்பட்டுள்ளது. இது குறித்து ஸ்கூல் பேக் விற்பனையாளர்கள் கூறுகையில், ‘கோடை விடுமுறை முடிந்து ஜூன் 3ம் தேதி பள்ளி திறக்க உள்ளதால், மாணவர்களுக்கான ஸ்கூல் பேக், லஞ்ச் பேக், குடை, பென்சில் உள்ளிட்ட எழுதுபொருட்கள், காலணிகளை பெற்றோர்கள் ஆர்வத்துடன் வாங்கி செல்கின்றனர். குறிப்பாக பேக்குகள் விற்பனை அமோகமாக நடக்கிறது,’ என்றனர்.

Tags :
× RELATED திரவுபதியம்மன் கோயில் கும்பாபிஷேக பெருவிழா