ஊத்தங்கரை, மே 28: தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு அருகே, பாறைக்கொட்டாய் பகுதியை சேர்ந்தவர் ராஜா(33). இவருக்கு புவனேஸ்வரி என்ற மனைவி உள்ளார். ராஜா திருவண்ணாமலை மூங்கில்துறைப்பட்டில் உள்ள ஸ்வீட் கடையில் மாஸ்டராக வேலை செய்து வந்தார். கடந்த சனிக்கிழமை இரவு, திருவண்ணாமலையில் இருந்து தனது ஊருக்கு டூவீலரில் சென்றுள்ளார். ஊத்தங்கரை அருகே கிருஷ்ணகிரி மெயின்ரோட்டில் சென்ற போது, எதிரே வந்த வாகனம் அவர் மீது மோதி விட்டு நிற்காமல் சென்று விட்டது. இதில், படுகாயமடைந்த ராஜா சம்பவ இடத்திலேயே பலியானார். இதுகுறித்து புவனேஸ்வரி அளித்த புகாரின் பேரில், ஊத்தங்கரை போலீசார் விசாரிக்கின்றனர்.