×

பொம்மிடி அருகே குடிநீர் கேட்டு மக்கள் சாலை மறியல்

பாப்பிரெட்டிப்பட்டி, மே 28: பொம்மிடி அருகே, சீரான குடிநீர் வழங்கக்கோரி பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். பாப்பிரெட்டிப்பட்டி தாலுகா, பொம்மிடி அருகே ரேகடஹள்ளியில் 400க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இப்பகுதியில், சின்டெக்ஸ் தொட்டிகள் மூலம் தண்ணீர் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. இந்நிலையில், கடந்த ஒரு வாரத்திற்கும் மேலாக குடிநீர் விநியோகம் செய்யப்படாததால், பொதுமக்கள் அவதிக்குள்ளாகி வருகின்றனர். இது குறித்து ஊராட்சி அலுவலக அதிகாரிகளிடம் முறையிட்டும், நடவடிக்கை எடுக்கவில்லை. இதனால் ஆவேசமடைந்த 50க்கும் மேற்பட்ட பெண்கள், நேற்று காலை காலி குடங்களுடன் பொம்மிடி-தர்மபுரி சாலையில் திரண்டு மறியலில் ஈடுபட்டனர். இதுகுறித்த தகவலின் பேரில், போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று, மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது, சீரான குடிநீர் விநியோகம் செய்வதாக உறுதி அளிக்கப்பட்டது. இதன் பேரில், மறியலை கைவிட்டு பெண்கள் கலைந்து சென்றனர்.

Tags : pyramid ,road ,
× RELATED குமுளி மலைச்சாலையில் வந்த போது பிரேக்...