சேலம் வாலிபர் மீது புகார்தர்மபுரி, மே 25: பொம்மிடி பகுதியைச் சேர்ந்தவர் சக்தி. இவரது மகள் பிரியா(17, பெயர்கள் மாற்றப்பட்டுள்ளது) ஐடிஐ படித்துள்ளார். கடந்த 21ம் தேதி வீட்டில் இருந்த பிரியா திடீரென மாயமானார். பல்வேறு இடங்களில் தேடியும் எங்கும் கிடைக்கவில்லை. இதுகுறித்து பிரியாவின் தாய் பொம்மிடி போலீசில் புகார் தெரிவித்தார். அதில், சேலம் பெரியகொல்லப்பட்டி பகுதியைச் சேர்ந்த முருகேசன் மகன் ஹரி(22) என்பவர் தனது மகளை கடத்திச் சென்று விட்டதாக தெரிவித்துள்ளார். இதன்பேரில், போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.