×

கிணற்றில் குளிக்க சென்ற மாணவன் நீரில் மூழ்கி பலி

திருப்பூர், மே 23: திருப்பூர், புதூர் மெயின் ரோடு, சுப்பிரமணியம் நகர் பகுதியை சேர்ந்தவர் மோகன்சஞ்சை(19). இவரது நண்பர் ராக்கியாபாளையம் பகுதியை சேர்ந்த அசோக்(19). இருவரும் ஈரோட்டிலுள்ள தனியார் பொறியியல் கல்லூரியில் மாணவர்கள். தற்போது கல்லூரி விடுமுறை நாள் என்பதால் நேற்று காங்கேயம் ரோடு ராக்கியாபாளையம், காளியப்பாநகரில் உள்ள கிணற்றில் குளிப்பதற்காக மோகன்சஞ்சை, அசோக் ஆகியோர் சென்றனர். இருவரும் இடுப்பில் டியூப் கட்டி கிணற்றில் குளித்து கொண்டிருந்த போது எதிர்பாராத விதமாக மோகன்சஞ்சை பயன்படுத்திய டியூபில் இருந்த காற்று இறங்கியது.

இதனால் சிறிது நேரத்தில் மோகன் சஞ்சை நீரில் மூழ்கி இறந்தார்.  இதுகுறித்து தகவலறிந்து சென்ற தீயணைப்பு துறையினர் சுமார் 30 நிமிடம் ேபாராடி மோகன்சஞ்சையின் உடலை மீட்டனர். பின் அவரது உடல் பிரேத பரிசோதனைக்காக திருப்பூர் அரசு தலைமை மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டது. இந்த சம்பவம் குறித்து ஊரக போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.

Tags : teenager ,well ,
× RELATED முள்ளக்காடு அருகே கோயில் திருவிழாவில் வாலிபர் மீது தாக்குதல்‘