×

ஸ்டெர்லைட் போராட்டத்தில் உயிரிழந்தவர்களுக்கு மலரஞ்சலி

அரியலூர், மே 23: அரியலூர் மாவட்டம் திருமானூர் ஒன்றியத்துக்கு உட்பட்ட மேலக்காவட்டாங்குறிச்சி கிராமத்தில் ஸ்டெர்லைட் போராட்டத்தில் உயிரிழந்தவர்களுக்கு மலரஞ்சலி நிகழ்ச்சி நடைபெற்றது.தூத்துக்குடி ஸ்டெர்லைட் போராட்டத்தில் போலீசார் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்த 13 பேருக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக 13 என்ற எண்ணை ஓவியமாக வரைந்து அப்படத்திற்கு மலர் தூவி அஞ்சலி செலுத்தினர். இந்நிகழ்ச்சியில் மக்கள் சேவை இயக்க தலைவர் தங்க சண்முக சுந்தரம், தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்டதலைவர் மணியன் உள்ளிட்ட கிராம மக்கள் விவசாயிகள், பள்ளி, கல்லூரி மாணவர்கள் பலர் கலந்து கொண்டனர்.



Tags :
× RELATED பெரம்பலூரில் செயல்படும் லால்குடி...