×

நம்பியார்குன்னு பகுதியில் மின்சாரம் இல்லாமல் மக்கள் பாதிப்பு

பந்தலூர், மே 21:  பந்தலூர் அருகே நம்பியார்குன்னு சுற்றுவட்டார பகுதிகளில் கடந்த 2 நாட்களாக மின்சாரம் இல்லாமல் மக்கள் அவதிப்பட்டு வருகின்றனர்.  நம்பியார்குன்னு, அம்பலமூலா, மதுவந்தால், நரிக்கொல்லி உள்ளிட்ட பகுதிகளில் கடந்த இரண்டு நாட்களுக்கு முன் பெய்த மழை மற்றும் சூறைக்காற்றுக்கு மின்கம்பம் முறிந்து விழுந்து மின்சாரம் துண்டிக்கப்பட்டது. அதனை மின்வாரியத்தினர் கடந்த இரண்டு நாட்களாக சீரமைக்காமல் உள்ளதால், அப்பகுதி மக்கள் இருளில் மூழ்கியுள்ளனர். இதனால் பொதுமக்கள் குடிநீர் இல்லாமல் பெரும் சிரமமடைந்து வருகின்றனர்.  இது குறித்து மின்வாரியத்திற்கு புகார் தெரிவித்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே பொதுமக்களின் நலன் கருதி சீரமைப்பு பணிகள் மேற்கொண்டு மின்சாரம் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags : area ,Nambiarargundu ,
× RELATED மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதியில்...