×

கடன் தொல்லையால் தம்பதி தூக்கிட்டு தற்கொலை

திருப்பரங்குன்றம், மே 21: கடன் தொல்லையால் கணவன், மனைவி தூக்கிட்டு தற்கொலை செய்த சம்பவம், நாகமலை புதுக்கோட்டையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மதுரை மாவட்டம், நாகமலைபுதுக்கோட்டை அருகே, என்ஜிஒ காலனியைச் சேர்ந்தவர் வெங்கடசுப்பிரமணியன் (40), மனைவி மீனாட்சி (37). இவர்களது வீடு கடந்த சில நாட்களாக பூட்டிக் கிடந்தது. நேற்று வீட்டில் இருந்து துர்நாற்றம் வீசவே, அக்கம்பக்கத்தினர் நாகமலைபுதுக்கோட்டை போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். சம்பவ இடத்துக்கு வந்த போலீசார், வீட்டின் பூட்டை உடைத்து பார்த்தபோது, உள்ளே கணவன் மனைவி இருவரும் தூக்கில் தொங்கியபடி இறந்து கிடந்தனர். போலீசார் உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக, மதுரை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். போலீசாரின் முதற்கட்ட விசாரணையில், கடன் தொல்லையால் தம்பதி தூக்கிட்டு தற்கொலை செய்ததாக தெரிய வந்துள்ளது.

Tags : suicide ,
× RELATED தெலங்கானாவில் மேலும் 2 விவசாயிகள் தற்கொலை