×

நாகர்கோவிலில் கஞ்சா விற்ற மேலும் 2 பேர் கைது

நாகர்கோவில், மே 21 :  குமரி மாவட்டத்தில்  கஞ்சா விற்பனையை தடுக்க  தீவிர நடவடிக்கை எடுக்கும்படி எஸ்.பி. நாத் உத்தரவிட்டார். இதனையடுத்து 10க்கும் மேற்பட்டவர்கள் இதுவரை கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த நிலையில் கோட்டார் இன்ஸ்பெக்டர் அன்புபிரகாஷ் தலைமையில் நேற்று முன் தினம் மாலை கம்பளம் பகுதியில் போலீசார் ரோந்து பணியில் இருந்தனர். அப்போது அந்த வழியாக வந்த கோட்டார் ஊட்டுவாழ்மடம் பகுதியை சேர்ந்த சரவணன் (28) என்பவரிடம் சந்தேகத்தின் பேரில் விசாரணை நடத்தினர். இதில் அவர் கஞ்சா வைத்திருந்தது தெரிய வந்தது. இதையடுத்து அவரை கைது செய்து அவரிடம் இருந்த 2 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்தனர். இதே போல் நேற்று மாலை எம்.ஜி.ஆர். நகரை சேர்ந்த ரூபன் என்பவரையும் கஞ்சாவுடன் போலீசார் கைது செய்தனர். போலீஸ் நடவடிக்கைக்கு பயந்து பலர் ஓட்டம் பிடித்து வருகிறார்கள். அவர்களை போலீசார் தேடி வருகிறார்கள்.

Tags : Ganjam ,Nagercoil ,
× RELATED இளம்பெண்களை ஆபாச வீடியோ எடுத்து...