×

திருப்பரங்குன்றம் இடைதேர்தல் சின்னமனூர் பகுதியில் பறக்கும்படை வாகன சோதனை

சின்னமனூர், மே 16: திருப்பரங்குன்றம் இடைத்தேர்தல் தொடர்பாக நேற்று சின்னமனூர் பகுதியில் பறக்கும் படையினர் வாகனச் சோதனையில் ஈடுபட்டனர். மதுரை அருகே உள்ள திருப்பரங்குன்றம் இடைத்தேர்தல் அறிவித்து வருகின்ற 19ம் தேதி தேர்தல் நடக்க இருக்கிறது. ஏற்கனவே தமிழகம் மற்றும் பாண்டிச்சேரியில் தேர்தல் நன்னடத்தைகள் நடைமுறை விதிகள் இன்னும் 27ம் தேதி வரையில் அமலில் இருக்கிறது. தேனி பாரளுமன்ற தொகுதியில் கடந்த ஏப்ரல் 18ம் தேதி தேர்தல் நடந்து முடிந்து வாக்கு இயந்திரங்கள் அனைத்தும் கொடுவிலார்பட்டி கம்மாவார் கல்லூரியில் வைக்கப்பட்டு 8 அடுக்கு பாதுகாப்பாக பாதுகாக்கப்பட்டு வருகிறது. இதற்கிடையில் திருப்பரங்குன்றம் இடைத்தேர்தல் எதிரொலியால் ஓட்டிற்காக பணம் எது வும் மொத்தமாக கொண்டு செல்லப்படுகிறதா என ஒவ்வொரு வாகனங்களையும் சின்னமனூர் நகர் பகுதிகளிலும் மற்றும் சின்னமனூர் சீப்பாலக்கோட்டை சாலை ஓடைப்பட்டி பேரூராட்சி பகுதியான சுக்காங்கல்பட்டி சிவபுரம் பகுதியிலும் நின்று, பறக்கும் படையினர் வருகின்ற வாகனங்களை சோதனையிட்டு அனுப்பினர்.

Tags : Vehicle testing ,area ,Tiruparankundam ,Chinnamanur ,
× RELATED அருமனை அருகே மின்கசிவு ஏற்பட்டு வீடு தீப்பிடித்து எரிந்தது