×

டூ வீலரில் சென்றவர் வேன் மோதி பலி

அரியலூர், மே 16: அரியலூர் மாவட்டம், திருமானூர் அருகேயுள்ள பளிங்காநத்தம் கிராமத்தை சேர்ந்தவர் மணி மகன் மணிகண்டன் (45), இவர் நேற்றுமுன்தினம் (14ம்தேதி) ஏலாக்குறிச்சி சாலையில், விழுப்பணங்குறிச்சியிலிருந்து திருமானூரை நோக்கி தனது டூவீலரில் வந்து கொண்டிருந்தார். அப்போது, விழுப்பணங்குறிச்சி வளைவில் எதிரே வந்த லோடு ஆட்டோ மோதியதில் பலத்த காயமடைந்த மணிகண்டன் தஞ்சை மருத்துவ கல்லூரி மருத்துவ கல்லூரியில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பலனின்றி  இறந்தார். இந்த சம்பவம் தொடர்பாக திருமானூர் போலிசார் வழக்கு பதிவு செய்து தப்பியோடிய வேன் டிரைவர் ஏலாக்குறிச்சியை சேர்ந்த சிவானந்தம் என்பவரை தேடிவருகின்றனர்.


Tags : kills ,ken ,
× RELATED அரியானாவில் பஸ் தீப்பிடித்து 9 பேர்...