காரிமங்கலம், மே 15: காரியமங்கலம்- பாலக்கோடு ரோட்டில் சேதமடைந்த மின் கம்பத்தை சீரமைக்க ேவண்டும் என மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். காரிமங்கலம்- பாலக்கோடு சாலையில் வணிக நிறுவனங்கள், அரசு பள்ளி, மற்றும் அரசு அலுவலகங்கள் அமைந்துள்ளது. இப்பகுதியில் உள்ள குடியிருப்புகளுக்கு மின் விநியோகம் செய்ய, அப்பகுதியில் கடந்த 10ஆண்டுகளுக்கு முன், கான்கிரீட் மின் கம்பம் அமைக்கப்பட்டது. இந்நிலையில் முறையான பராமரிப்பு இல்லாததால், மின் கம்பத்தின் கான்கிரீட் உதிர்ந்து, இரும்பு கம்பிகள் வெளியே தெரிகிறது. இதனால் மின் கம்பம் உடைந்து விடும் நிலை ஏற்பட்டுள்ளது. எனவே பழுதடைந்த மின் கம்பத்தை அகற்ற, மின் வாரிய அதிகாரிகள் விரைவில் நடவடிக்கை எடுக்க ேவண்டும் என மக்கள் ேவண்டுகோள் விடுத்துள்ளனர்.