×

காவல்கிணறில் பூட்டிய வீடுகளில் அத்துமீறும் கும்பல்

பணகுடி, மே 14:   காவல்கிணறில் பூட்டிய வீடுகளை நோட்டமிடும் மர்மநபர்கள் நள்ளிரவில், அவர்களது வீட்டு முன் நிற்கும் கார்களை உடைத்து சேதப்படுத்துகின்றனர். பணகுடி அடுத்த காவல்கிணறில் சூமார் 6 ஆயிரத்திற்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இவர்களில் பெரும்பாலான ஆண்கள்  அரபு நாடுகளில் வேலை பார்த்து வருகின்றனர். இதனால் ஒரு சில வீடுகளில் குழந்தைகளுடன் தனிமையில் வசிக்கும் பெண்களை கடந்த சில மாதங்களாக மர்மகும்பல் குறிவைத்து நள்ளிரவில் வீட்டின் கதவுகளை உடைப்பதோடு வீட்டின் முன்புறம் நிறுத்தப்பட்டுள்ள கார் கண்ணாடிகளை உடைத்து சேதப்படுத்தி வருகின்றனர்.

கடந்த 3 தினங்களுக்கு முன்னர் காவல்கிணறு மெயின் ரோட்டில் உள்ள ரெனால்ட் என்பவரது மனைவி மார்சூஸ்மெர்சிலிபியா (42) என்பவரது வீட்டின் முன் நிறுத்தப்பட்டிருந்த காரை மர்ம நபர்கள் உடைத்துள்ளனர். புகாரின் பேரில் பணகுடி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். சம்பவம் குறித்து மார்சூஸ் மெர்சிலிபியா கூறுகையில், ‘‘எனது கணவர் கடந்த 8 மாதங்களுக்கு முன் இறந்துவிட்டார். இரு மகள்களும் அரசு மருத்துவக் கல்லுரிகளில் படித்து வருகின்றனர். நான், எனது அம்மாவுடன் வசித்து வருகிறேன்.

3 நாட்களுக்கு முன்பு வெளியூர் சென்றிருந்தபோது எனது வீட்டு முன் நிறுத்தியிருந்த காரை மர்மகும்பல் உடைத்துள்ளது. மேலும் கடந்த சில மாதங்களாகவே வீட்டு காம்பவுண்டுக்குள் இருக்கும் மரங்களை வெட்டுதல், கேட்டை உடைத்தல் உள்ளிட்ட செயல்களில் ஈடுபட்டு வருகிறது. சம்பந்தப்பட்டவர்கள் மீது காவல்துறை உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்’’ என்றார்.

Tags : houses ,
× RELATED வருசநாடு அருகே விளை பொருட்களை கொண்டு செல்வதில் சிரமம்