×

சித்தூர் அருகே டீக்கடைக்குள் லோடு ஆட்டோ புகுந்து முதியவர் பலி 4 பேர் படுகாயம்

திருமலை, மே 14: சித்தூர் அருகே டீக்கடைக்குள் லோடு ஆட்டோ புகுந்ததில் முதியவர் பரிதாபமாக பலியானார். மேலம் 4 பேர் படுகாயமடைந்தனர். சித்தூர் மாவட்டம், தவனம்பல்லியை சேர்ந்த முகமது ரபி. இவர் அரகொண்டாவில் இருந்து சித்தூர் நோக்கி நேற்று லோடு ஆட்டோவில் சென்று கொண்டிருந்தார். இந்த லோடு ஆட்டோ, தவனம்பல்லி மண்டலம், மத்தியம் கிராஸ் அருகே சென்று சென்றபோது முன்னால் சென்றுகொண்டிருந்த வாகனத்தை முந்திச் செல்ல முயன்றது.

இதில் கட்டுப்பாட்டை இழந்த லோடு ஆட்டோ சாலையோரம் இருந்த வீடு மீது மோதி டீக்கடைக்குள் புகுந்தது. அப்போது டீக்கடையில் அமர்ந்திருந்தவர்கள் டி.தட்காரா கிராமத்தை சேர்ந்த கண்ணையா(55), உடல் நசுங்கி ரத்த வெள்ளத்தில் துடிதுடித்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். மேலும் முனிரத்தினம்(75), பிரபு சந்திரா(45), அப்துல் காதர்(55), சின்னபாபு(75) ஆகிய 4 பேர் படுகாயமடைந்தனர். படுகாயமடைந்தவர்களை அப்பகுதி மக்கள் மீட்டு சிகிச்சைக்காக சித்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த விபத்து குறித்து தவனம்பல்லி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
4 யானைகள் கூட்டம் சுற்றி வருகிறது.

Tags : persons ,auto rickshaw ,tip area ,Chitto ,
× RELATED கனடாவில் ரூ.133 கோடி மதிப்பிலான...