×

மாமனாரை தாக்கிய மருமகன் மீது வழக்கு

அரியலூர், மே 14: அரியலூர் அருகே மாமனாரை தாக்கிய மருமகன் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

அரியலூர் மாவட்டம் விக்கிரமங்கலம் அருகே ஸ்ரீபுரந்தான் மெயின் ரோட்டை சேர்ந்த விவசாயி பெரியசாமி (60). அதே பகுதியை சேர்ந்தவர் மாணிக்கம் (40) என்பவருக்கு தனது மகள் கலாதேவியை (35) திருமணம் செய்து கொடுத்துள்ளார் இவர்கள் இருவருக்கும் கருத்து வேறுபாடு இருந்துள்ளது.


இதனால் கலாதேவி தனது தந்தை பெரியசாமி வீட்டில் வசித்து வந்தார். இந்நிலையில் மாணிக்கம் தனது மனைவி கலாதேவியை சமாதானபடுத்தி தனது வீட்டுக்கு அனுப்பி வைக்குமாறு மாமனாரிடம் கேட்டுள்ளார். இதில் ஏற்பட்ட தகராறில் மாமனார் பெரியசாமியை மருமகன் மாணிக்கம் தாக்கினார். இதுகுறித்து விக்கிரமங்கலம் காவல் நிலையத்தில் பெரியசாமி புகார் செய்தார். சப்இன்ஸ்பெக்டர் செந்தில்குமார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகிறார்.

Tags : nephew ,father-in-law ,
× RELATED பாஜக எம்எல்ஏவின் மருமகன்.. ஈரோடு...