×

(ஆந்திரா செய்தி எண்.09) ஆந்திர பெண்ணை கரம்பிடித்த அமெரிக்க இன்ஜினியர் இந்து சம்பிரதாயப்படி திருமணம் 6 ஆண்டுகளாக காதலித்து வந்தனர்

சித்தூர், மே 10: ஆந்திர பெண்ணை 6 ஆண்டுகளாக காதலித்து வந்த அமெரிக்க இன்ஜினியர் இந்து சம்பிரதாயப்படி முறைப்படி திருமணம் செய்துகொண்டார். ஆந்திர மாநிலம், சித்தூரை சேர்ந்தவர் சுதாகர் நாயுடு, இவரது மனைவி குமாரி. இவர்களது மகன் நிரிஷா. இன்ஜினியரான இவர் அமெரிக்காவில் எம்எஸ் படிப்பதற்காக சென்றார். அப்போது, அமெரிக்காவை சேர்ந்த பீட்டர், சரூன் தம்பதியின் மகனான இன்ஜினியர் ஆன்ட்ரூசுக்கும் இடையே காதல் ஏற்பட்டது. கடந்த 6 ஆண்டுகளாக இருவரும் காதலித்து ஒரே நிறுவனத்தில் பணிபுரிந்து வந்தனர்.

இந்நிலையில் இருவரது பெற்றோரும் இவர்களுக்கு திருமணம் செய்து வைக்க முடிவு செய்தனர். அதன்படி, சித்தூர் எம்எஸ்ஆர் சர்க்கிளில் உள்ள திருமண மகாலில் நேற்று இந்து சம்பிரதாய முறைப்படி ஆன்ட்ரூசுக்கும், நிரிஷாவுக்கும் திருமணம் நடந்தது. இதில் உறவினர்கள், நண்பர்கள் உட்பட பலர் கலந்துகொண்டு புதுமண தம்பதியை வாழ்த்தினர்.

Tags : Andhra News Number ,Indian ,Andhra ,
× RELATED கடும் வெயில் காரணமாக தமிழகத்துக்கு...