×

புதுச்சத்திரம் அருகே லாரிகள் மோதி வாலிபர் பலி

சேந்தமங்கலம்,மே 9: புதுச்சத்திரம் அருகே லாரிகள் மோதியதில் வாலிபர் பலியானார். சேலம் மாவட்டம் ஓமலூர் அடுத்துள்ள செம்மன்டம்பட்டி பகுதியை சேர்ந்தவர் பழனிசாமி இவரது மகன் ரவிக்குமார் (36) சொந்தமாக தறிபட்டறை நடத்தி வருகிறார். திருமணம் ஆகவில்லை. இவர் நேற்று நாமக்கல் மாவட்டம் ராசிபுரத்தில் இருந்து தனது டூவீலரில் திருச்செங்கோடு சென்று கொண்டிருந்தார். அப்போது புதுச்சத்திரம் அடுத்துள்ள பிள்ளநல்லூர் பஸ்நிறுத்தம் அருகில் எதிரே வந்த போர்வெல் லாரி டூவீலர் மீது மோதியது.
இதில் பலத்த காயமடைந்த ரவிக்குமார் சம்பவஇடத்திலேயே உயிரிழந்தார். இது குறித்து புதுச்சத்திரம் போலீசார் விசராணை நடத்தி வருகின்றனர்.  


Tags : Lorry ,newborn ,
× RELATED சைக்கிள் திருடிய லாரி டிரைவர் கைது