×

சைக்கிள் திருடிய லாரி டிரைவர் கைது

கோபி, ஏப்.23: கோபி அருகே உள்ள வேப்பம்பாளையத்தில் சைக்கிள் திருடிய லாரி டிரைவர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். சேலம் மாவட்டம் மேட்டூர் அருகே உள்ள கண்ணாமூச்சி கிராமத்தை சேர்ந்தவர் முருகசாமி (51). இவருக்கு கோபி அருகே உள்ள வேப்பம்பாளையத்தில் விவசாய பூமி உள்ளது. முருகசாமி அவ்வப்போது வேப்பம்பாளையம் வந்து செல்வது வழக்கம். இங்கு உள்ள வீட்டில் முருகசாமி சைக்கிள் ஒன்றை வைத்துள்ளார். இந்நிலையில், வீட்டில் இருந்த சைக்கிள் மர்ம நபரால் திருடு போனது.

இது குறித்து முருகசாமி அளித்த புகாரின் அடிப்படையில் சிறுவலூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். போலீசார் நடத்திய விசாரணையில் சைக்கிள் திருடியது அதே பகுதியை சேர்ந்த தர் (30) என்பது தெரியவந்தது. இதைத்தொடர்ந்து, லாரி டிரைவராக உள்ள தரை சிறுவலூர் போலீசார் கைது செய்து அவரிடம் இருந்த சைக்கிளை மீட்டனர். தொடர்ந்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.

The post சைக்கிள் திருடிய லாரி டிரைவர் கைது appeared first on Dinakaran.

Tags : Gobi ,Veppampalayam ,Murugasamy ,Kannamoochi ,Mettur ,Salem district ,Vepampalayam ,Lorry ,
× RELATED பேருந்து நிலையத்தில் கோபி நகர திமுக சார்பில் நீர்மோர் பந்தல் திறப்பு