×

முதியவர் சாவில் மர்மம்

 

மல்லசமுத்திரம், ஏப்.29: எலச்சிபாளையம் அருகே, நல்லாம்பாளையம் கிராமம் மாமரத்துகாடு பகுதியைச் சேர்ந்தவர் குமாரசாமிகவுண்டர் (98), விவசாயி. இவரது மூத்தமகன் ராமசாமியின் பராமரிப்பில் இருந்து வந்தார். இந்நிலையில், நேற்று அதிகாலை குமாரசாமிகவுண்டர் இறந்து விட்டார். இதனையடுத்து, அவரது சாவில் மர்மம் இருப்பதாகவும், அவரது வங்கி கணக்கில் ₹20 லட்சம் இருப்பதாகவும், அதன் வரவு செலவு காண்பிக்கப்பட வேண்டும் எனவும் கூறி இளையமகன் வாசுதேவனின் மனைவி விமலா நேற்று, எலச்சிபாளையம் போலீசில் புகார் அளித்தார். இதன் பேரில், எலச்சிபாளையம் எஸ்ஐ பொன்குமார், குமாரசாமியின் சடலத்தை கைப்பற்றி, திருச்செங்கோடு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தார். மேலும், வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

 

The post முதியவர் சாவில் மர்மம் appeared first on Dinakaran.

Tags : Mallasamutram ,Kumarasamygaunder ,Mamarathukadu ,Nallampalayam ,Elachipalayam ,Ramasamy ,Kumaraswamy ,
× RELATED பழுதான தண்ணீர் தொட்டி இடிப்பு