×

தர்மபுரி அருகே 4 கடைகளின் பூட்டை உடைத்து கொள்ளை

தர்மபுரி, மே 8: தர்மபுரி அருகே அடுத்தடுத்து 4 கடைகளில் பூட்டை உடைத்து பணம் கொள்ளையடிக்கப்பட்டது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். தர்மபுரி செட்டிக்கரை அரசு பொறியியல் கல்லூரி (டீக்கடை) பஸ் ஸ்டாப் பகுதியை சேர்ந்தவர் சேகர் (45). அதே பகுதியில் ஆயில்மில் வைத்து நடத்தி வருகிறார். நேற்று காலை வழக்கம்போல் ஆயில் மில்லிற்கு வந்தார். அப்போது ஆலையின்பூட்டு உடைக்கப்பட்டு கதவு திறந்து கிடந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தார்.

உள்ளே சென்று பார்த்த போது, அங்கு வைக்கப்பட்டிருந்த ₹8 ஆயிரம் கொள்ளை போயிருப்பது தெரியவந்தது. இதையடுத்து அவர் தர்மபுரி போலீஸ் ஸ்டேஷனில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இதுபோல், ஆயில் மில்லின் அருகில் பத்மினி (50) என்பவர் மருந்துக்கடை வைத்து நடத்தி வருகிறார். நேற்று முன்தினம் இரவு 8 மணிக்கு வழக்கம் ேபால், கடையை  மூடிவிட்டு, நேற்று காலை கடையை திறக்க வந்தார். அப்போது கடையின் ஷட்டர் லாக்கர் உடைக்கப்பட்டு ₹3 ஆயிரம் கொள்ளை போனது தெரியவந்தது.  

மருந்து கடையின் அருகே உள்ளே இரண்டு மளிகை கடையில் பூட்டு உடைக்கப்பட்டுள்ளது. ஆனால் பணம் எதுவும் கொள்ளை போகவில்லை. ஆட்கள் நடமாட்டம் இருந்ததால், கொள்ளை முயற்சி மட்டும் நடந்துள்ளது. இரவு நேரத்தில் கடைகளை அடைத்து சென்றதை நோட்டமிட்டு, மர்ம நபர்கள் இந்த கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டுள்ளனர். மளிகைகடையில் உள்ள சிசிடிவி கேமரா பதிவை வைத்து, போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கொள்ளை நடந்த கடைகளில் கைரேகை பதிவு எடுக்கப்பட்டுள்ளது. இந்த கைரேகை பழைய குற்றவாளிகளியின் கைரேகை ஒத்துபோயுள்ளதாக தெரியவந்துள்ளது. அந்த கொள்ளையர்களை பிடிக்க போலீசார் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.

Tags : stores ,Dharmapuri ,
× RELATED வாகனம் மோதி பெயிண்டர் பலி