×

அட்சய திருதியை முன்னிட்டு நித்தியக்கல்யாண பெருமாள் கருட வாகனத்தில் வீதியுலா

காரைக்கால், மே 8: அட்சய திருதியை முன்னிட்டு, காரைக்கால் பாரதியார் வீதியில் உள்ள நித்தியக்கல்யாணப் பெருமாள் கோயிலில், கருட வாகனத்தில் பெருமாள் வீதியுலா செல்லும் நிகழ்ச்சி நடைபெற்றது. அட்சய திருதியை நாளில், மக்கள் தானம் செய்தல், தங்க நகைகள் உள்ளிட்ட புதிய பொருட்கள் வாங்குவதும், பெருமாள் கோயில்களில் வழிபாடு நடத்துவதும் வழக்கமாக கொண்டுள்ளனர். நேற்று அட்சயதிருதி நாள் கொண்டாடப்பட்டது.
 
இந்நாளையொட்டி, காரைக்கால் பாரதியார் வீதியில் உள்ள நித்யகல்யாண பெருமாள் கோயிலில் உதய கருட சேவையாக கருட வாகனத்தில் வெண்பட்டு சிறப்பு அலங்காரத்தில் நித்யகல்யாண பெருமாள் எழுந்தருளி வீதியுலா செல்லும் நிகழ்ச்சி நடைபெற்றது.  இந்நிகழ்ச்சியில், ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர். இதேபோல், காரைக்கால் கோவில்பத்து கோதண்டராம பெருமாள் கோயில்,  திருமலைராயன்பட்டினத்தில் உள்ள பிரசன்ன வெங்கடேச பெருமாள், ரகுநாத பெருமாள், வீழிவரதராஜ பெருமாள் கோயிலிலும் சிறப்புத் ஆராதனை நடைபெற்றது.

Tags : Perumal Perumal ,Tiruchi ,
× RELATED திருச்சி எ.புதூரில் பைக் திருடன் கைது