×

செங்காட்டுப்புதூரில் ஒகேனக்கல் குடிநீர் கேட்டு கலெக்டர் ஆபிசில் மனு

தர்மபுரி, மே 7: பாப்பிரெட்டிப்பட்டி தாலுகா அதிகாரபட்டி அடுத்த செங்காட்டுப்புதூரில், ஒகேனக்கல் குடிநீர் வழங்க கோரி கிராம மக்கள் நேற்று கலெக்டர் அலுவலகத்தில் மனு கொடுத்தனர். பாப்பிரெட்டிப்பட்டி தாலுகா அதிகாரப்பட்டி அடுத்த செங்காட்டுப்புதூர் கிராம மக்கள், நேற்று கலெக்டர் அலுவலகத்தில் கொடுத்த மனுவில் கூறியிருப்பதாவது: பாப்பிரெட்டிப்பட்டி தாலுகா அதிகாரப்பட்டி ஊராட்சி செங்காட்டுப்புதூரில், சுமார் 100 குடும்பத்தினர் வசித்து வருகிறோம். இங்கு கடந்த 2 வருடங்களாக குடிநீர் தட்டுப்பாடு நிலவுகிறது. எங்கள் கிராமத்தில் உள்ள 3 மின்விசை பம்புகளில் ஒன்று கூட சரியான முறையில் செயல்படுவதில்லை.

மேலும், எங்கள் கிராமத்திற்கு ஒகேனக்கல் கூட்டு குடிநீர் வருவதே இல்லை. இது குறித்து ஊராட்சி நிர்வாக ஊழியர்களிடம் கேட்டதற்கு, குடிநீர் விநியோகத்திற்கும் எங்களுக்கும் சம்பந்தம் இல்லை என கூறி விட்டனர். இதனால், குடிநீரை விலைக்கு வாங்கி பயன்படுத்தி வருகிறோம். மின்விசை பம்ப்பை பலமுறை சரி செய்தும் எந்த பலனும் இல்லை. இது தொடர்பாக தாசில்தார் அலுவலகத்தில் மனு கொடுத்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை. எனவே, மாவட்ட நிர்வாகம் எங்கள் மனுவின் மீது உரிய விசாரணை நடத்தி, எங்கள் கிராமத்தில் ஒகேனக்கல் குடிநீர் கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.

Tags : petitioner ,Hogenakkal ,
× RELATED வேட்பாளர் பட்டியல் வெளியாகும் முன்பே...