×

சாஸ்வதா நிறுவன முறைகேடு பாதிக்கப்பட்டவர்கள் புகார் அளிக்கலாம்: பொருளாதார குற்றப்பிரிவு அறிவிப்பு

சென்னை: குரோம்பேட்டை சாஸ்வதா நிதி நிறுவனத்தில் முதலீடு செய்து ஏமார்ந்தவர்கள் புகார் அளிக்கலாம், என பொருளாதார குற்றப்பிரிவு அறிவித்துள்ளது. குரோம்பேட்டை சாஸ்வதா நிதி லிமிடெட் நிறுவனத்தில் முதலீடு செய்து பணத்தை திரும்ப பெறாதவர்கள், பொருளாதார குற்றப்பிரிவில் புகார் அளித்தனர். இதையடுத்து வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்ெகாள்ளப்பட்டது. அப்போது புகார் செய்தவர்களுக்கு நிறுவனமே பணத்தை திரும்ப செலுத்தியது.

இந்நிறுனத்தில் பணம் செலுத்தி திரும்ப பெறாமல் விடுபட்டு இருந்தால் இன்று முதல் 15 தினங்களுக்குள் சம்மந்தப்பட்டவர்கள் காவல் துணை கண்காணிப்பாளர் பிரிதிவிராஜன் (044-2250, 2314) சென்னை பொருளாதார குற்றப்பிரிவு-2, சிட்கோ பழைய கட்டிட வளாகம், திரு.வி.க.தொழிற்பேட்டை, கிண்டி என்ற முகவரியில் தகுந்த ஆதாரங்களுடன் நேரில் வர வேண்டும், என பொருளாதார குற்றப்பிரிவு அறிவித்துள்ளது.

Tags : institution ,Saswada ,victims ,Announcement ,
× RELATED நியோமேக்ஸ் வழக்கு: போலீசார் பதில் மனு தாக்கல் செய்ய ஐகோர்ட் கிளை உத்தரவு