×

கபடி போட்டியில் தேவாலா அணி வெற்றி

பந்தலூர், மே. 7: பந்தலூர் அருகே ஏலமன்னா பகுதியில் மாவட்ட அளவில் நடந்த கபடி போட்டியில் தேவாலா அணி வெற்றி பெற்றது.  சன் ஸ்டார் ஆர்ட்ஸ் அன்டு ஸ்போர்ட்ஸ் கிளப் ஏலமன்னா மற்றும் அமெச்சூர் கபடி கழகம் நேரு யுவகேந்திரா இணைந்து 2ம் ஆண்டு மாவட்ட அளவிலான கபடி போட்டி நேற்று ஏலமன்னா விளையாட்டு மைதானத்தில் நடத்தியது. இந்த போட்டியை பந்தலூர் தாசில்தார் கிருஷ்ணமூர்த்தி, ஆர்.ஐ. காமு ஆகியோர்  துவக்கி வைத்தனர். இதில் ஊர்பிரமுகர்கள் ஆசைதம்பி, செல்வகுமார், புஜ்பராஜ், விஜயராஜ், குமார் ஆகியோர் கலந்து கொண்டு குத்துவிளக்கு ஏற்றினர்.

  இந்நிகழ்ச்சியில் மாவட்ட அளவில் 16 அணிகள் கலந்துகொண்டு விளையாடினர். இறுதிப்போட்டியில் வாளவயல் விஎஸ்சி அணியும், தேவாலா தீபம் அணியும் மோதினர். இதில் 6 புள்ளிகள் வித்தியாசத்தில் தேவாலா தீபம் அணி வெற்றி பெற்று முதல் பரிசு ரூ.10 ஆயிரம் மற்றும் பரிசு கோப்பையும் தட்டிச்சென்றனர். இரண்டாம் பரிசாக வாளவயல் விஎஸ்சி அணி ரூ.7 ஆயிரம் மற்றும் பரிசு கோப்பையும் பெற்றனர். மூன்றாம் பரிசாக ஓவேலி ஹோப் எஸ்ஏஎஸ் அணி தட்டிச்சென்றது. இதற்கான ஏற்பாடுகளை விளையாட்டு குழுவினர் மற்றும் ஊர்மக்கள் செய்திருந்தனர்.

Tags : Deval ,team ,match ,
× RELATED வங்கதேச பெண்களுக்கு எதிராக இந்தியா ஹாட்ரிக் வெற்றி