×

பாப்பிரெட்டிப்பட்டி அருகே சாலையோர திறந்தவெளி கிணற்றால் விபத்து அபாயம்

பாப்பிரெட்டிப்பட்டி மே 3:  பாப்பிரெட்டிப்பட்டி அருகே சாலையோர திறந்த வெளிக்கிணற்றால், வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. பாப்பிரெட்டிப்பட்டி அருகே மெணசியில் இருந்து விழுதப்பட்டி செல்லும் பிரதான சாலை வழியாக, தினந்தோறும் 500க்கும் மேற்பட்ட வாகனங்கள் சென்று வருகிறது. இந்த சாலையோரத்தில் தனியாருக்கு சொந்தமான விவசாய கிணறு, சுற்றுச்சுவர் இல்லாமல் பாதுகாப்பற்ற நிலையில் உள்ளது. இந்த சாலையில் மின் விளக்கு வசதி இல்லாததால், இரவு நேரத்தில் வரும் வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்கும் அபாயம் உள்ளது. எனவே, அசம்பாவிதம் நிகழும் முன்பாக, ஆபத்தான இந்த சாலையோர கிணற்றுக்கு சுற்றுச்சுவர் அமைக்க  நடவடிக்கை எடுக்க ேவண்டும் என அப்பகுதி மக்கள் ேகாரிக்கை விடுத்துள்ளனர்.

Tags : Pappirippatti ,
× RELATED வாழப்பாடியில் மாயமான சிறுவன் பாப்பிரெட்டிப்பட்டியில் மீட்பு