×

பாப்பிரெட்டிப்பட்டி அருகே அரசு பஸ் மீது கல்வீசி கண்ணாடி உடைப்பு

பாப்பிரெட்டிப்பட்டி, மே 3:  ஈரோட்டில் இருந்து வேலூருக்கு, நேற்று முன்தினம் 40 பயணிகளுடன் அரசு பஸ் புறப்பட்டது. பஸ்சை ஈரோட்டை சேர்ந்த அருள்பிரகாஷ்(42) என்பவர் ஓட்டிச்சென்றார். பாப்பிரெட்டிப்பட்டி அருகே அலமேலுபுரம் பகுதிக்கு நள்ளிரவு 2 மணியளவில் வந்த போது, மர்ம நபர்கள் பஸ்சின் முன் பகுதியில் கல் வீசி தாக்கினர். இதில் பஸ்சின் முன்பக்க கண்ணாடி உடைந்து நொறுங்கியது. இது குறித்து டிரைவர் அருள்பிரகாஷ், பாப்பிரெட்டிப்பட்டி ேபாலீஸ் ஸ்டேஷனில் கொடுத்த புகாரின் ேபரில், ேபாலீசார் வழக்குப்பதிவு செய்து, கல் வீசி விட்டு தப்பியோடிய மர்ம நபர்கள் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags : Government ,Pappirippatti ,
× RELATED புதுச்சேரி அரசு ஊழியர்களுக்கு எச்சரிக்கை