×

துறையூர் அருகே வெங்கடேசபுரம் ஊராட்சியில் சுகாதார வளாகத்தை பொதுமக்கள் பயன்பாட்டிற்கு திறக்க கோரிக்கை

துறையூர்: மே 3: துறையூர் ஒன்றியத்தில் உள்ள வெங்கடேசபுரம் ஊராட்சியில் குறிஞ்சி தெருவில் அரசின் முழு சுகாதார திட்டத்தில் சுகாதார வளாகம் கட்டப்பட்டு 10 வருடம் ஆகியும் மக்கள் பயன்பாட்டிற்கு கட்டிடம் திறக்கப்படவில்லை. இந்த வளாகம் அருகே தாய் திட்டதில் 2015-16ல் ரூ.1.5 லட்சம் மதிப்பில்  புதிதாக ஆழ்குழாய் கிணறு அமைத்து, மின் மோட்டார் மற்றும் பைப் லைன் விஸ்தரிப்பு செய்யபட்டும் இதுவரை சுகாதார வளாகத்தை திறக்கப்படவில்லை. இந்த வளாகத்தை சுற்றி இரண்டு ஆழ்குழாய் கிணறு இருந்தும் தண்ணீர் வசதி இல்லை என கூறி ஊராட்சி நிர்வாகம் மூடியே வைத்துள்ளது. எனவே ஊராட்சி நிர்வாகம் வளாகம் அருகில் இருக்கும் ஆழ்குழாய் கிணற்றை சீர் செய்து சுகாதார வளாகத்தை மக்கள் பயன்பாட்டிற்கு பயன்படுத்த இப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags : Health Campus ,use ,Venkatesapuram Panchayat ,Thuraiyur ,
× RELATED அதிகரித்து வரும் தின்பண்ட கடைகள்...