×

10 ஏக்கர் வைக்கோல் எரிந்து சாம்பல்

கூத்தாநல்லூர் அருகே கொரடாச்சேரி சாலையில் உள்ளது அத்திக்கடை ஊராட்சி. இந்த ஊராட்சியை சேர்ந்த திட்டாணிமுட்டம் கிராமத்தில் உள்ள ஜவகர் தெருவில் எஸ்.எம்.எஸ்.ரவி, அக்பர், சலாவுதீன், மல்லிகா ஆகியோருக்கு சொந்தமான 10 எக்கர் நிலம் உள்ளது. இந்த நிலங்களில் சமீபத்தில் பயிர் செய்யப்பட்டு அறுவடை செய்த வைக்கோல் பாதுகாக்கப்பட்டு வைக்கப்பட்டிருந்தது. இதே பகுதியில் நேற்று 100 நாள் வேலைத்திட்டத்தின் கீழ் நடைபெற்ற வேலையின்போது பணியாளர்கள் அங்கிருந்த முட்செடிகளுக்கு தீவைத்து கொளுத்தியதாக தெரிகிறது. அப்போது அதிலிருந்த தீப்பொறி பக்கத்தில் இருந்த வைக்கோலில் பட்டு 10 ஏக்கர் வைக்கோலும் தீப்பிடித்து எரிந்தது. உடனடியாக இதை கவனித்த முன்னாள் ஊராட்சி மன்றத்தலைவர் மாவெல் அழகன் கூத்தாநல்லூர் தீயணைப்பு படையினருக்கு தகவல் கொடுத்தார். அதனை தொடர்ந்து நிலைய அதிகாரி சம்பத்குமார் தலைமையில் தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு சென்று தீ மேலும் பரவாமல் தடுத்து அணைத்தனர்.

Tags :
× RELATED திருவாரூர் விதை பரிசோதனை நிலையத்தில் வேளாண். கல்லூரி மாணவர்கள் பயிற்சி