×

தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருள் விற்றால் நடவடிக்கை தி.பூண்டி நகராட்சி ஆணையர் எச்சரிக்கை

திருத்துறைப்பூண்டி, மே 3: திருத்துறைப்பூண்டி நகராட்சி பகுதியில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை விற்பனை செய்தால் நீதிமன்றம் மூலம் நடவடிக்கை எடுக்கப்படும் என்று நகராட்சி ஆணையர் எச்சரிக்கை விடுத்துள்ளார். திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி நகர பகுதியில் உள்ள வணிக நிறுவனங்களில் தமிழக அரசால் தடைசெய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் விற்பனை செய்யப்படுகிறதா, பயன்படுத்தப்படுகிறதா என்பது குறித்து நகராட்சி ஆணையர் பாஸ்கரன் தலைமையில் சுகாதார ஆய்வாளர் வெங்கடாசலம் மற்றும் அலுவலர்கள் ஆய்வு மேற்கொண்டனர். ஆய்வில் ரூ.50000 மதிப்பிலான தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் மற்றும் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது. தடையை மீறி பிளாஸ்டிக் பொருட்களை விற்பனை செய்த 10 கடைகளுக்கு தலா ரூ.2000 வீதம் ரூ.20000 அபராதம் விதிக்கப்பட்டது. திருத்துறைப்பூண்டியில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் விற்பனையில் தொடர்ந்து விதி மீறி செயல்படும் வணிக நிறுவனங்கள் மீது நீதிமன்றம் மூலம் நடவடிக்கை எடுக்கப்படும் என்று நகராட்சி ஆணையர் பாஸ்கரன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

Tags : TPI ,commissioner ,
× RELATED “188 இடங்களில் தண்ணீர் பந்தல்...